செய்திகள்
மரணம்

சுவாமிமலை அருகே வாய்க்காலில் தவறி விழுந்து விவசாயி பலி

Published On 2019-10-15 12:01 GMT   |   Update On 2019-10-15 12:01 GMT
சுவாமிமலை அருகே வாய்க்காலில் தவறி விழுந்து விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுவாமிமலை:

சுவாமிமலை அருகே உள்ள திருப்புறம்பியம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 38), விவசாயி. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை பிரிந்து தன்னுடைய தம்பி பழனிசாமியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மனநிலை பாதித்த நிலையில் உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். அவர் நேற்று திருப்புறம்பியம் அருகிலுள்ள மன்யாற்று பிரிவு கொத்தங்குடி வாய்க்காலில் தவறி விழுந்து இறந்துவிட்டார்.

இதுபற்றி பொதுமக்கள் சுவாமிமலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News