செய்திகள்
கோப்பு படம்

லாட்ஜில் அறை எடுத்து விபசாரம் - 2 பெண் புரோக்கர்கள் உள்பட 3 பேர் கைது

Published On 2019-10-15 11:55 GMT   |   Update On 2019-10-15 11:55 GMT
கோவை அருகே லாட்ஜில் அறை எடுத்து விபசாரத்தில் ஈடுபட்ட 2 பெண் புரோக்கர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை:

கோவை ராம்நகர் கோகலே வீதியில் உள்ள தனியார் லாட்ஜில் அறை வாடகைக்கு எடுத்து சிலர் அழகிகளை வைத்து விபசாரம் நடத்துவதாக காட்டூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர்.

அங்கு அழகிகளை வைத்து விபசாரம் நடத்திய புரோக்கர்கள் கணபதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 41), காளம்பாளையத்தை சேர்ந்த காளீஸ்வரி (27), திருப்பூரை சேர்ந்த லதா (27) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News