செய்திகள்
கோப்பு படம்

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.9½ லட்சம் மோசடி - 4 பேர் மீது வழக்கு

Published On 2019-10-15 10:21 GMT   |   Update On 2019-10-15 10:21 GMT
பெரியகுளம் அருகே அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.9½ லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
தேனி:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடகரை பட்டாப்புளி நடுத்தெருவை சேர்ந்தவர் ஆனந்தபாபு(வயது31). பட்டதாரியான இவர் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். அவரிடம் அதேபகுதியை சேர்ந்த மரைக்காயர் என்பவர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.9½ லட்சம் பெற்றுள்ளார்.

ஆனால் சொன்னபடி வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் ஆனந்தபாபு தனது பணத்தை திரும்ப கேட்டார். இதில் ஆத்திரமடைந்த மரைக்காயர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வத்தலக்குண்டு வ.உ.சி நகரை சேர்ந்த சையதுஇப்ராகிம்ஷா, டி.கள்ளிப்பட்டி ஆசிரியர் காலனியை சேர்ந்த நவுசாத்அலி, அல்லிநகரத்தை சேர்ந்த ஜெய்லானி ஆகியோர் ஆனந்தபாபுவை அவதூறாக பேசி மிரட்டினார்களாம்.

இதுபற்றி ஆனந்தபாபு கொடுத்த புகாரின்பேரில் பெரியகுளம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News