செய்திகள்
கைது

கொடைக்கானலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு- வாலிபர் கைது

Published On 2019-10-15 10:18 GMT   |   Update On 2019-10-15 10:18 GMT
கொடைக்கானலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கொடைக்கானல்:

கொடைக்கானல் வில்பட்டி கோம்பையை சேர்ந்த 16வயது சிறுமியும் அவரது தம்பியும் அட்டுவம்பட்டியில் உள்ள ஒரு சர்ச்சில் நடந்த ஆராதனையில் கலந்துகொண்டுவிட்டு மாலை நேரத்தில் தங்களது ஊரான கோம்பைக்கு நடந்துசென்றுள்ளனர்.

அப்போது அவ்வழியாக வந்த அந்த சிறுமியின் உறவுக்காரரான வில்பட்டி அருகே உள்ள கோவில்பட்டியை சேர்ந்த துரைராஜீ-ன் மகன் ராஜா (35)சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யும் நோக்கில் உடன்வந்த சிறுமியின் தம்பியை மிரட்டி விரட்டிவிட்டு சிறுமியை புதர்பகுதிக்குள் இழுத்துச்சென்றுள்ளார்.

சிறுமி கூச்சலிடவே அந்த சாலையில் வந்தவர்கள் திரண்டனர். இதை பார்த்த ராஜா சிறுமியை விட்டுவிட்டு புதருக்குள் ஓடி மறைந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கொடைக்கானல் மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து அளித்த புகாரின்பேரில் போலீசார் ராஜாவை கைது செய்தனர். அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News