செய்திகள்
தற்கொலை

வில்லியனூர் அருகே லாரி டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2019-10-15 10:17 GMT   |   Update On 2019-10-15 10:17 GMT
வில்லியனூர் அருகே மதுகுடித்து விட்டு வந்ததை மனைவி கண்டித்ததால் லாரி டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வில்லியனூர்:

வில்லியனூர் அருகே தொண்டமாநத்தம் கிராமம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது42). லாரி டிரைவர். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். குடிப்பழக்கம் உள்ள ராஜமாணிக்கம் குடும்ப செலவுக்கு பணம் ஏதுவும் கொடுக்காமல் சம்பாதித்த பணத்தை மதுகுடித்து வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்து வந்தார். இதனால் கணவன்-மனைவிக்டையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

அதுபோல நேற்றும் ராஜமாணிக்கம் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித் தார். இதனால் கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ராஜமாணிக்கம் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் மனைவியின் சேலையால் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News