செய்திகள்
விபத்து

திருச்செந்தூர் அருகே விபத்து- அனல்மின் நிலைய ஊழியர் பலி

Published On 2019-10-14 13:48 GMT   |   Update On 2019-10-14 13:48 GMT
திருச்செந்தூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் அனல்மின் நிலைய ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்செந்தூர்:

ஆறுமுகநேரி அருகே உள்ள பேயன்விளையை சேர்ந்தவர் அரசகுமார் (வயது 32). இவர் திருச்செந்தூர் அருகே உள்ள கல்லாமொழியில் உள்ள அனல் மின் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரும், இவரது நண்பரான சுடலைராஜாவும் திருச்செந்தூரில் இருந்து மெஞ்ஞானபுரத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். 

பைக்கை அரசகுமார் ஓட்டி வந்தார். அப்போது அவர்கள் திருச்செந்தூரை அடுத்த காந்திபுரம் அருகே வரும்போது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சாலை அருகே தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்வேலி தடுப்பு தூணில் பயங்கரமாக மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் அரசகுமார் பரிதாபமாக இறந்தார். சுடலை ராஜாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News