செய்திகள்
கைது

வண்ணாரப்பேட்டையில் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை- டிரைவர் கைது

Published On 2019-10-14 09:32 GMT   |   Update On 2019-10-14 09:32 GMT
வண்ணாரப்பேட்டையில் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
ராயபுரம்:

வண்ணாரப்பேட்டை ஸ்டான்லி நகர் குடியிருப்பு பகுதியில் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்த ஒரு ஆட்டோவை போலீசார் சோதனையிட்டனர். அதில் ஒரு கிலோ கஞ்சா பொட்டலங்களாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆட்டோவையும், கஞ்சாவையும் பறிமுதல் செய்து டிரைவர் கோபியை கைது செய்தனர். விசாரணையில் இவர் கொருக்குப்பேட்டை கண்ணகி நகரை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

அவரது வீட்டில் சோதனையிட்ட போது மேலும் 2 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. ஆந்திராவில் இருந்து ரெயிலில் கஞ்சா கடத்தி வந்து சிறு பொட்டலங்களாக்கி விற்று வந்ததாக அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News