செய்திகள்
கொள்ளை நடந்த அரிசி ஆலை அதிபர் வீடு.

ஆரணி அருகே அரிசி ஆலை அதிபர் வீட்டில் 80 பவுன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளை

Published On 2019-10-13 17:16 GMT   |   Update On 2019-10-13 17:16 GMT
ஆரணி அருகே அரிசி ஆலை அதிபர் வீட்டில் புகுந்து மர்ம நபர்கள் 80 பவுன் நகை ரூ 5 லட்சத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
ஆரணி:

ஆரணி அருகே உள்ள சேவூர் இ.பி நகரை சேர்ந்தவர் ஆனந்தன் மகன் அருண்குமார். சேவூரில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். 
இவரது பெற்றோர் ஆரணியில் வசித்து வருகின்றனர். நேற்று கடைசி சனிக்கிழமை என்பதால் இவரது பெற்றோர் வீட்டில் பூஜை செய்தனர். இதற்காக அருண்குமார் நேற்று இரவு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் ஆரணி சென்றார்.

இதனை பயன்படுத்திக் கொண்ட மர்ம கும்பல் நள்ளிரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவில் இருந்த 80 பவுன் தங்க நகை மற்றும் ரூ.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்தனர். மேலும் வீட்டில் வேறு ஏதாவது உள்ளதா என்று தேடி பார்த்துள்ளனர். இதனால் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் சிதறி அடிக்கப்பட்டன.

இன்று காலை அருண்குமார் வீடு திரும்பினார். வீட்டில் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்டார். உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோவில் இருந்த 80 பவுன் நகை, பணம் கொள்ளை போனது தெரியவந்தது. 

இது பற்றி ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பல இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் சேகரிக்கப்பட்டன. அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அரிசி ஆலை அதிபர் வீட்டில் நடந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News