செய்திகள்
கைது

நடத்தையில் சந்தேகம்: மனைவியை எரித்துக்கொல்ல முயன்ற கணவன் கைது

Published On 2019-10-13 13:48 GMT   |   Update On 2019-10-13 13:48 GMT
திருமங்கலம் அருகே மனைவியை எரித்துக் கொல்ல முயன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.
திருமங்கலம்:

திருமங்கலம் அருகே கூடக்கோவில் போலீஸ் சரகத்தில் உள்ள எலியார் பத்தியைச் சேர்ந்தவர் நாராயணன், கூலி தொழிலாளி. இவரது மனைவி சின்னப் பொண்ணு (வயது38). இவர்களுக்கு 2 மகன், 1 மகள் உள்ளனர். குடிப்பழக்கம் உள்ள நாராயணன் போதையில் மனைவியை அடித்து உதைப்பார். மேலும் நடத்தையில் சந்தேகப்பட்டு அவதூறாக பேசி வந்தார்.

வழக்கம்போல் நேற்று இரவு போதையில் வந்த நாராயணன் சின்னப் பொண்ணுவிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம்  முற்றவே நாராயணன் ஆத்திரமடைந்து வீட்டில் இருந்த மண்எண்ணையை சின்னப் பொண்ணு மீது ஊற்றி தீ வைத்தார். வெப்பம் தாங்காமல் வெளியே அலறியடித்துக் கொண்டு ஓடி வந்தார். அக்கம் பக்கத்தினர் சின்னப்பொண்ணு உடலில் எரிந்த தீயை அணைத்து 108 ஆம்புலன்சில் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து கூடக்கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நாராயணனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடை பெற்று வருகிறது.
Tags:    

Similar News