செய்திகள்
பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி

விக்கிரவாண்டி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம்

Published On 2019-10-12 12:59 GMT   |   Update On 2019-10-12 12:59 GMT
அதிமுக வேட்பாளரை ஆதரித்து விக்கிரவாண்டி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
விக்கிரவாண்டி:

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முத்தமிழ்ச்செல்வனும், தி.மு.க. சார்பில் புகழேந்தி உள்பட 12 பேர் போட்டியிடுகிறார்கள்.

விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க- தி.மு.க. இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் 2 வேட்பாளர்களும் தொகுதி முழுவதும் தீவிர ஓட்டு வேட்டை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க.வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா கனவை அ.தி.மு.க. நிறைவேற்றி வருகிறது. உயர்கல்வியில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது, அ.தி.மு.க. அரசு கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது என தெரிவித்தார்.

விக்கிரவாண்டியின் முண்டியம்பாக்கம் பகுதியில் இன்று மாலை தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அவர், ராதாபுரம், விக்கிரவாண்டி பேரூராட்சி வி.சாத்தனூர்,  டி.புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

முதலமைச்சரின் தேர்தல் பிரச்சாரத்தை முன்னிட்டு விக்கிரவாண்டியில் சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
Tags:    

Similar News