செய்திகள்
தற்கொலை

லாஸ்பேட்டையில் முதியவர் தற்கொலை

Published On 2019-10-11 11:14 GMT   |   Update On 2019-10-11 11:14 GMT
லாஸ்பேட்டையில் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுவை லாஸ்பேட்டை எழில்நகர் 7-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜான்போஸ்கோ (வயது 61). இவரது மனைவி ஜெனீபர் (45). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

ஜான் போஸ்கோவுக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டது. மேலும் வலிப்பு நோய் உள்ளதால் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் மன வேதனை அடைந்த ஜான் போஸ்கோ தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று மதியம் தனது கைலியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதனை அறிந்த அவரது மனைவி ஜெனிபர் அதிர்ச்சி அடைந்து அலறினார்.

பின்னர் தனது மகன் உதவியுடன் ஜான்போஸ் கோவை தூக்கில் இருந்து மீட்டு கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஜெனிபர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News