செய்திகள்
ஏ.சி.சண்முகம்

மோடி-சீன அதிபர் சந்திப்பு: ஏ.சி.சண்முகம் வாழ்த்து

Published On 2019-10-11 10:18 GMT   |   Update On 2019-10-11 10:18 GMT
மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சந்திப்பு மாபெரும் வெற்றியடைய வேண்டும் என்று ஏ.சி.சண்முகம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:

புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், “இந்தியாவிற்கு சீன அதிபரை அழைத்த பிரதமர், அவரை மாமல்லபுரத்தில் தான் சந்திக்க வேண்டும் என்று இடத்தை முடிவு செய்ததன் காரணம், அவர் தமிழகத்தின் பாரம்பரியம், பழமை மீது கொண்ட அளவு கடந்த பாசமே ஆகும்.

உலகமே தமிழகத்தை அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய இரு தினங்களும் உற்றுநோக்க வைத்துவிட்டார் பிரதமர் மோடி. இந்த இரு பெரும் தலைவர்களின் சந்திப்பு மாபெரும் வெற்றியடைய தமிழக மக்கள் சார்பாகவும், புதிய நீதிக்கட்சி சார்பாகவும் வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News