செய்திகள்
ஜிகே வாசன்

கத்ரி கோபால்நாத் மரணம்- ஜி.கே.வாசன் இரங்கல்

Published On 2019-10-11 10:10 GMT   |   Update On 2019-10-11 10:10 GMT
சாக்சபோன் இசைக் கலைஞர் கத்ரி கோபால்நாத் மறைவுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சாக்சபோன் இசைக் கலைஞர் கத்ரி கோபால்நாத் மறைந்த செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது.

திருவையாறு ஸ்ரீதியாக பிரம்ம மகோத்சவ சபா விழாவில் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் பலமுறை கலந்து கொண்டு, பல இசைநிகழ்ச்சியில் பங்கேற்று கேட்பவர்கள் மனதை மெய்மறக்கச் செய்யும் அளவிற்கு சாக்சபோன் இசையை அரங்கேற்றியவர்.

தமிழக அரசின் கலைமாமணி விருதும், மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் பெற்ற பாராட்டுக்குரியவர்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், இசைக்கலைஞர்களுக்கும், இசைப்பிரியர்களுக்கும் திருவையாறு ஸ்ரீதியாக பிரம்ம மகோத்சவ சபாவின் தலைவர், அறங்காவலர், நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் இசை ரசிகர்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News