வாடிப்பட்டி அருகே கணவருடன் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
வாடிப்பட்டி:
வாடிப்பட்டி அருகே உள்ள சாணாம்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி பாண்டி செல்வி (வயது 23). இவர், வாடிப்பட்டி கால்நடை மருத்துவமனை அருகே உள்ள தனியார் பஞ்சு மில் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு பணி முடிந்து பாண்டிசெல்வி, கணவருடன் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
பழனி ஆண்டவர் கோவில் பிரிவு ரோடு அருகே வந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள், திடீரென்று பாண்டிசெல்வி அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.
இதில் நிலை தடுமாறி கணவனும், மனைவியும் கீழே விழுந்ததில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து வாடிப்பட்டி போலீசில் கார்த்திக் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாலாஜி வழக்குப்பதிவு செய்து, நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர்களை தேடி வருகிறார்.