செய்திகள்
அமைச்சர் கடம்பூர் ராஜூ

அமைச்சர் கடம்பூர் ராஜூ மருத்துவமனையில் அனுமதி

Published On 2019-10-09 12:44 GMT   |   Update On 2019-10-09 12:44 GMT
நாங்குநேரி இடைத்தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப் பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாங்குநேரி:

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன் போட்டியிடுகிறார். 
இந்நிலையில், நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட களக்காடு பகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி கிழே விழுந்தார். 

இதைத்தொடர்ந்து, அக்கட்சியினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அவரை மீட்டு பாளையங்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் திடீரென மயங்கி விழுந்ததால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News