செய்திகள்
ஆண்டிப்பட்டி அருகே ஓடை மணல் கடத்திய மினி லாரி பறிமுதல்
ஆண்டிப்பட்டி அருகே ஓடை மணல் கடத்த பயன்படுத்திய மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மணல் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் மட்டுமின்றி குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
மணல் கடத்தும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். மாவட்ட கனிமவளத்துறை தனி வருவாய் ஆய்வாளர் கண்ணன் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த மினி லாரி அதிகாரிகளை கண்டதும் திடீரென நின்றது. அதில் இருந்து 3 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
லாரியை சோதனையிட்டபோது அதில் ஓடை மணல் கடத்தியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்து ராஜதானி போலீசில் ஒப்படைத்தனர். மேலும் தப்பி ஓடிய கார்த்திக்ராஜா, ராஜா, தவபுதல்வன் ஆகியோரை தேடி வருகின்றனர்.