செய்திகள்
கொள்ளை

திருவள்ளூர் அருகே ஆட்டோ டிரைவர் வீட்டில் நகை கொள்ளை

Published On 2019-10-05 07:17 GMT   |   Update On 2019-10-05 07:17 GMT
திருவள்ளூர் அருகே ஆட்டோ டிரைவர் வீட்டின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து 6 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த அதிகத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அசின் ராவுத்தர். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். மாலை வீடு திரும்பிய போது முன்பக்க கதவு பூட்டு உடைந்து கிடந்தது.

உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 6 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. இது குறித்து கடம்பத்தூர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News