செய்திகள்
கைது

தர்மபுரி மாவட்டத்தில் புகையிலை விற்ற 13 பேர் கைது

Published On 2019-09-29 17:08 GMT   |   Update On 2019-09-29 17:08 GMT
தர்மபுரி மாவட்டத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புகையிலை விற்ற 13 பேரை கைது செய்தனர்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பவர்களை கைது செய்யக்கோரி தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் போலீசாருக்கு உத்தரவிட்டார். இது குறித்து தர்மபுரி மாவட்ட முழுவதும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். 

இந்த சோதனையில் அதியமான் கோட்டை போலீசார் வெங்கட்ராமன் மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரை கைது செய்தனர்.

இதேபோன்று மதிகோன்பாளையத்தில் ஆனந்தன் மற்றும் அருண்கோரி ஆகிய இருவரை கைது செய்தனர். கிருஷ்ணாபுரத்தில் ராணி மற்றும் வேலு ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதேபோன்று கடத்தூர், கம்பைநல்லூர், மொரப்பூர், பென்னாகரம், ஒகேனக்கல் மற்றும் இண்டூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் புகையிலை விற்றவர்களை கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 13 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.
Tags:    

Similar News