செய்திகள்
ஓ.பன்னீர்செல்வம்

இடைத்தேர்தலில் கூட்டணி கட்சிகள் ஆதரவு தருவார்கள் - ஓ.பன்னீர்செல்வம்

Published On 2019-09-27 10:36 GMT   |   Update On 2019-09-27 10:36 GMT
தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சென்னை:

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் குடிசை மாற்று வாரியத்தால் புதிதாக கட்டப்பட்டு வரும் வீடுகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 13 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 6 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு தரும் இயக்கங்கள் மற்றும் கட்சிகளிடம் ஆதரவு கோரியுள்ளோம். கூட்டணி கட்சியினர் அனைவரும் ஆதரவு தருவார்கள் என நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.
Tags:    

Similar News