செய்திகள்
கைது

சின்னதடாகம் பகுதியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது

Published On 2019-09-26 10:35 GMT   |   Update On 2019-09-26 10:35 GMT
கோவை மாவட்டம் சின்னதடாகம் பகுதியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 2¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கவுண்டம்பாளையம்:

கோவை சின்ன தடாகம் புளியமர பஸ் நிறுத்த பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தடாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தடாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு 2 வடமாநில வாலிபர்கள் சுற்றி திரிந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து போலீசார் வாலிபர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு நடத்திய விசாரணையில், அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரமேஷ்(வயது 40), தொப்பமந்து மலிக்(21) என்பதும், இவர்கள் அந்த பகுதியில் நின்று கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் தங்களுக்கு அதே மாநிலத்தை சேர்ந்த காசிம் ஜிதின்(34) என்பவர் கஞ்சா வாங்கி கொடுத்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2¼ கிலோ கஞ்சாவையும், ரூ.700 பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News