செய்திகள்
வழிப்பறி

வில்லியனூர் அருகே தனியார் கம்பெனி ஊழியரிடம் வழிப்பறி

Published On 2019-09-25 13:28 GMT   |   Update On 2019-09-25 13:28 GMT
வில்லியனூர் அருகே தனியார் கம்பெனி ஊழியரிடம் வழிப்பறி செய்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
வில்லியனூர்:

வில்லியனூர் அருகே உள்ள தமிழக பகுதியான சங்கராபுரம் அத்தியூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். (வயது 23). இவர் வில்லியனூர் அருகே உள்ள மங்கலத்தில் உள்ள ஒரு மருந்து கம்பெனியில் ஊழியரக பணியாற்றி வருகிறார். இவர் வடமங்கலத்தில் தங்கி இருக்கிறார். 

நேற்று வேலை முடிந்து இரவு 10 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் வடமங்கலத்துக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு உள்ள அய்யனார் கோவில் அருகே வந்தபோது, 7 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று கோவிந்தராஜை வழிமறித்து அவரிடம் இருந்த செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறித்துக்கொண்டு சென்று விட்டது.

இது குறித்து கோவிந்தராஜ் மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சரண்யா வழக்குபதிவு செய்து வழிப்பறி செய்த மர்ம கும்பலை தேடி வருகிறார்.
Tags:    

Similar News