செய்திகள்
தற்கொலை

தேனி அருகே பள்ளி மாணவி உள்பட 6 பேர் தற்கொலை

Published On 2019-09-25 08:58 GMT   |   Update On 2019-09-25 08:58 GMT
தேனி அருகே வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி மாணவி உள்பட 6 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
தேனி:

தேனி அருகில் உள்ள முத்துதேவன்பட்டி மெயின்ரோடு பகுதியை சேர்ந்த செல்லத்துரை மகள் பாவனா (வயது12). இவர் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

சம்பவத்தன்று தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தாய் வனிதா கொடுத்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் சின்ன ஓவுலாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன் (45). இவர் அதே ஊரைச் சேர்ந்த குமார் என்பவருடன் கோகிலாபுரத்திற்கு வந்து விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். வாய்க்கால்பட்டி அங்காள ஈஸ்வரியம்மன் கோவில் அருகே வாய்க்காலில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து உத்தமபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள முத்துகிருஷ்ணாபுரம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (46). இவருக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகியது. திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். குடி பழக்கத்தால் அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார்.

சம்பவத்தன்று திருப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்த ரவிச்சந்திரன் பூச்சி மருந்தை குடித்து க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இது குறித்து அவரது தந்தை நாராயணசாமி கொடுத்த புகாரின் பேரில் ஆண்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண்டிப்பட்டி அருகில் உள்ள ஜக்கம்பட்டி வடக்கு புதுத்தெருவை சேர்ந்தவர் ராமர் (55). இவர் குடும்பத்தில் சொத்துக்களை தனது மகன்களுக்கு பிரித்து கொடுத்தார். இதில் பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த ராமர் சம்பவத்தன்று தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தேனி மாவட்டம் கே.கே.பட்டி ராமுகவுடர் தெருவை சேர்ந்த சுப்பையா மனைவி மல்லம்மாள் (69). தனியாக வசித்து வந்த அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போடி அருகில் உள்ள நந்தவன கோவில் தெருவை சேர்ந்தவர் சுருளிவேல் (48). டெய்லர்வேலை பார்த்து வந்தார். இவரது மகன் சந்தோஷ்குமாருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது.

சுருளிவேல் குடிபழக்கத்திற்கு அடிமையானவர். இதனை அவரது மகன் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சுருளிவேல் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போடி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News