செய்திகள்
மின்சாரம் தாக்கி பலி

பாப்பாரப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

Published On 2019-09-23 14:05 GMT   |   Update On 2019-09-23 14:05 GMT
பாப்பாரப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தருமபுரி:

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியை அடுத்துள்ள வத்திமரத்துஅள்ளி பகுதியை சேர்ந்தவர் கோபால் (வயது57). விவசாயி. இவர் வீட்டின் முன் வளர்ந்த மரத்தை அகற்றி கொண்டிருந்தார். அப்போது மின்வயர் சென்ற இரும்பு பைப் திடீரென சரிந்து விழுந்தது. இதனை தாங்கி பிடித்தபோது கோபால் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக கோபால் உயிரிழந்தார். 

இது குறித்து தகவல் அறிந்த பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோபால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News