செய்திகள்
திருவல்லிக்கேணியில் வீடு புகுந்து ரவுடியை கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது
திருவல்லிக்கேணியில் வீடு புகுந்து ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பத்தில் கடந்த 19-ந்தேதி அறிவழகன் என்ற ரவுடியை வீடு புகுந்து வெட்டிக் கொன்றனர்.
அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் அறிவழகனுக்கு ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்தது தெரிய வந்தது. அறிவழகனை வீட்டுக்குள் வைத்தே சரமாரியாக வெட்டிய கொலையாளிகள் அவரது தலையை 2 துண்டாக வெட்டி மூளையை வெளியில் எடுத்து தட்டில் வைத்து விட்டு தப்பினர்.
அறிவழகன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இது தொடர்பாக அண்ணா சதுக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்ட்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் அறிவழகன் கொலை தொடர்பாக வினோத், பாலாஜி ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இருவரும் சகோதரர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே இந்த வழக்கில் கொலையாளிகளுக்கு உதவி செய்ததாக சுரேஷ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கொலையுண்ட அறிவழகன் பெண்ணிடம் தகராறு செய்த போது, அவரது ஆடையை கிழித்துள்ளார். இதன் காரணமாகவே அவரது மகன்கள் அறிவழகனை கொலை செய்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பத்தில் கடந்த 19-ந்தேதி அறிவழகன் என்ற ரவுடியை வீடு புகுந்து வெட்டிக் கொன்றனர்.
அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் அறிவழகனுக்கு ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்தது தெரிய வந்தது. அறிவழகனை வீட்டுக்குள் வைத்தே சரமாரியாக வெட்டிய கொலையாளிகள் அவரது தலையை 2 துண்டாக வெட்டி மூளையை வெளியில் எடுத்து தட்டில் வைத்து விட்டு தப்பினர்.
அறிவழகன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இது தொடர்பாக அண்ணா சதுக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்ட்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் அறிவழகன் கொலை தொடர்பாக வினோத், பாலாஜி ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இருவரும் சகோதரர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே இந்த வழக்கில் கொலையாளிகளுக்கு உதவி செய்ததாக சுரேஷ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கொலையுண்ட அறிவழகன் பெண்ணிடம் தகராறு செய்த போது, அவரது ஆடையை கிழித்துள்ளார். இதன் காரணமாகவே அவரது மகன்கள் அறிவழகனை கொலை செய்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.