செய்திகள்
வேலை கிடைக்காததால் வாலிபர் தற்கொலை
வேலை கிடைக்காததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
மதுரவாயலை அடுத்த நூம்பல் ஜட்ஜஸ் காலனியை சேர்ந்தவர் சந்திரமோகன். இவரது மகன் கிருஷ்ண குமார் (வயது 26). இவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பவித்ரா என்பவரை காதலித்து திருமணம்செய்து கொண்டார். படிப்புக்கு தகுந்த வேலை ஏதும் கிடைக்காததால் கிருஷ்ணகுமார் ஆட்டோ ஓட்டி வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனையில் இருந்த கிருஷ்ணகுமார் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.