செய்திகள்
கூடலூரில் காட்டுயானை தாக்கி பெண் பலி
கூடலூரில் காட்டுயானை தாக்கி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி:
கூடலூர் அருகே சளிவயல் மிள்ளிகுன்னு குறும்பர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் காளி (வயது 74). பழங்குடியினத்தை சேர்ந்தவர். சம்பவத்தன்று இவர் அதே பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு விறகு சேகரிக்க சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் காளியை தேடினர்.
இந்நிலையில் நேற்று மாலைகிராமத்தில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ள வனபகுதியில் காட்டு யானை தாக்கி இறந்து கிடப்பது தெரியவந்தது.
இது குறித்து தகவல் கிடைத்ததும் வனச்சரகர் ராமகிருஷ்ணன், வன ஊழியர்கள் மற்றும் போலீசார்சம்பவ இடத்துக்கு வந்து மூதாட்டியின் உடலை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சமீப காலமாக காட்டுயானை தாக்கி உயிரிழப்பு ஏற்படும் சம்பவம் அடிக்கடி நடப்பதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.