செய்திகள்
கோப்பு படம்

25 பவுன் நகைக்காக மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 7 பேர் மீது வழக்கு

Published On 2019-09-21 13:30 GMT   |   Update On 2019-09-21 13:30 GMT
தேனி அருகே 25 பவுன் நகைக்காக மனைவியை கொடுமைபடுத்திய கணவர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தேனி:

தேனி மாவட்டம் எரசக்கநாயக்கனூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜாராம் மகள் பிரியங்கா (வயது 25). இவருக்கும் காமாட்சிபுரத்தைச் சேர்ந்த ராஜாராம் (30) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 47 பவுன் நகையும், மாப்பிள்ளைக்கு 3 பவுன் சங்கிலியும் ரூ.2 லட்சம் மதிப்பிலான சீர் வரிசைகளும் வரதட்சணையாக கொடுத்தனர்.

திருமணம் முடிந்த மறுநாளே பெண் வீட்டார் உங்கள் குடும்பத்தில் 75 பவுன் நகை வழங்குவதாக கூறி விட்டு 50 பவுன் நகை மட்டுமே கொடுத்துள்ளனர். எனவே மீதி 25 பவுன் நகையை வாங்கி வருமாறு அவரிடம் கூறினர்.

நகையை வாங்கி வராத காரணத்தால் பிரியங்காவை அடித்து சித்ரவதை செய்துள்ளனர். இது குறித்து போடி அனைத்துமகளிர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வரதட்சணை கொடுமை படுத்திய கணவர் ராஜாராம், மாமியார் செல்வி, மாமனார் மனோகரன், உறவினர்கள் ஆதிலெட்சுமி, கணேஷ், சங்கரன், கார்த்திகேயன், ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News