செய்திகள்
கோவையில் அரசுக்கு எதிராக சதி திட்டம் - ஆட்டோ டிரைவர் கைது
தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலையை பயன்படுத்தி அரசுக்கு எதிராக சதி திட்டம் திட்டியதாக கோவை ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை:
கோவை கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
அவர்கள் அவினாசி ரோடு சென்னியாண்டவர் கோவில் மேம்பாலம் அருகே சென்ற போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த வாலிபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். இதனை பார்த்த போலீசார் அந்த வாலிபரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வாலிபர் வினோபா நகரை சேர்ந்த ராஜகோபால் என்பவரது மகன் பூபாலன் (வயது 31) ஆட்டோ டிரைவர் என்று தெரிய வந்தது.
மேலும் பூபாலன் தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலையை பயன்படுத்தி அரசுக்கு எதிராக ஏதாவது ஒரு செயலை செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும், ஆட்சியை கவிழ்க்க சதி திட்டம் தீட்டி உள்ளதாகவும் தெரிவித்தார். பூபாலன் தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வந்ததால் அவர் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், ஆட்சியை கவிழ்க்க சதி திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
கோவை கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
அவர்கள் அவினாசி ரோடு சென்னியாண்டவர் கோவில் மேம்பாலம் அருகே சென்ற போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த வாலிபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். இதனை பார்த்த போலீசார் அந்த வாலிபரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வாலிபர் வினோபா நகரை சேர்ந்த ராஜகோபால் என்பவரது மகன் பூபாலன் (வயது 31) ஆட்டோ டிரைவர் என்று தெரிய வந்தது.
மேலும் பூபாலன் தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலையை பயன்படுத்தி அரசுக்கு எதிராக ஏதாவது ஒரு செயலை செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும், ஆட்சியை கவிழ்க்க சதி திட்டம் தீட்டி உள்ளதாகவும் தெரிவித்தார். பூபாலன் தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வந்ததால் அவர் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், ஆட்சியை கவிழ்க்க சதி திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.