செய்திகள்
திருச்சியில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு- 2 வாலிபர்களிடம் விசாரணை
திருச்சியில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி:
திருச்சி கே.கே.நகர்காஜா மலையை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சித்ரா (வயது 45). இவர் கடந்த 14ந்தேதி பொருட்கள் வாங்குவதற்காக திருச்சி சத்திரத்திற்கு சென்றார். பின்னர் பொருட்கள் வாங்கி விட்டு மீண்டும் வீடு திரும்பினார். அவர் சத்திரத்திலிருந்து அரசு பஸ் மூலம் கே.கே.நகர் பஸ் நிலையத்திற்கு வந்தார். பஸ்சை விட்டு இறங்கிய பின்னர் தனது கைப்பையை சரி பார்த்தபோது அந்தபை பிளேடால் அறுக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டி ருந்தது.
இது குறித்து சித்ரா கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாயஅன்பரசு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் கூட்ட நெரிசலை பயன் படுத்தி மர்மநபர்கள் கைப்பையை அறுத்து அதில் இருந்த 5 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள். கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.1 1/2 லட்ச மாகும்.