செய்திகள்
கைது

கோவையில் சந்தன மரத்தை வெட்டி கடத்திய 2 பேர் கைது

Published On 2019-09-20 09:45 GMT   |   Update On 2019-09-20 09:45 GMT
கோவையில் சந்தன மரத்தை வெட்டி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை மாநகராட்சி பகுதிகளான ஆர்.எஸ்.புரம், ரேஸ்கோர்ஸ், சாய்பாபா காலனி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் வீடுகளில் இருந்த சந்தன மரம் மர்ம நபர்களால் வெட்டி கடத்தப்பட்டது. இக்கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலைய எல்லை பகுதியில் சந்தன மரத்தை வெட்டி கடத்திய வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த ராமசாமி (52), ரங்கசமுத்திரம் கோவிந்தசாமி (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

குனியமுத்தூரை சேர்ந்தவர் முகமது பைசல் (34). இவர் உக்கடம் பைபாசில் செல்போனில் பேசி கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் முகமது பைசலின் செல்போனை பறித்து கொண்டு சென்று விட்டனர்.

இது குறித்து உக்கடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து முகமது பைசலிடம் செல்போன் பறித்த உக்கடம் புல்லுக்காடு பகுதியை சேர்ந்த சங்கர் கணேஷ் (22) என்பரை கைது செய்தனர்.

அவரது நண்பர் தாரிக் (24) தலைமறைவாகி விட்டார் அவரை தேடி வருகிறார்கள். இவர்களுடன் சேர்ந்து 17 வயது இளம் பெண்ணும் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. அவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News