செய்திகள்
விபத்து

வில்லியனூர் அருகே டிராக்டர் மோதி பெண் பலி

Published On 2019-09-20 08:47 GMT   |   Update On 2019-09-20 08:47 GMT
வில்லியனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியதில் பெண் பலியானார்.

வில்லியனூர்:

வில்லியனூர் அருகே உறுவையாரை சேர்ந்தவர் கார்த்திகேயன் சிற்ப வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுந்தரி (வயது 49). இவர்களுக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் நேற்று மணக்குள விநாயகர் கோவிலுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் புதுவைக்கு வந்து கொண்டு இருந்தனர்.

கோட்டைமேடு அருகே வந்த போது பின்னால் வந்த டிராக்டர் அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சுந்தரி படுகாயம் அடைந்தார். அவரது கணவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு வில்லியனூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுந்தரி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News