செய்திகள்
செய்யாறில் 10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
செய்யாறில் ஆசை வார்த்தை கூறி 10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செய்யாறு:
செய்யாறு பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி. இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு கடந்த வாரம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து மாணவியை அவரது தாயார் செய்யாறில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அப்போது மாணவியை பரிசோதித்த டாக்டர் மாணவி நான்கு மாத கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்தார்.
இது குறித்து மாணவியின் தாயார் செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தியதில் செய்யாறு அண்ணா நகர் மாரியம்மன் கோவிலை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (வயது 31). மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்ததாகவும் இதனால் மாணவி கர்ப்பம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து தட்சிணாமூர்த்தியை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் மாணவியை மீட்டு செய்யாறு மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
செய்யாறு பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி. இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு கடந்த வாரம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து மாணவியை அவரது தாயார் செய்யாறில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அப்போது மாணவியை பரிசோதித்த டாக்டர் மாணவி நான்கு மாத கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்தார்.
இது குறித்து மாணவியின் தாயார் செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தியதில் செய்யாறு அண்ணா நகர் மாரியம்மன் கோவிலை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (வயது 31). மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்ததாகவும் இதனால் மாணவி கர்ப்பம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து தட்சிணாமூர்த்தியை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் மாணவியை மீட்டு செய்யாறு மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.