செய்திகள்
விபத்து

திருவையாறு அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

Published On 2019-09-19 11:06 GMT   |   Update On 2019-09-19 11:06 GMT
திருவையாறு அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவையாறு:

திருவையாறு அடுத்த வைத்தியநாதன்பேட்டை கடையதோப்பு மெயின்ரோட்டை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது60). விவசாய கூலி தொழிலாளி.

இவர் நேற்று முன்தினம் இரவு ரோட்டை கடக்கும்போது மெயின்ரோட்டில் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக கிருஷ்ணன் மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். உடனே அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் கிருஷ்ணன் நேற்று இறந்துவிட்டார்.

இது குறித்து அவரது மகன் முத்தையன் கொடுத்த புகாரின்பேரில் மருவூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News