செய்திகள்
போலீசார் விசாரணை

திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் மர்ம மரணம் - போலீசார் விசாரணை

Published On 2019-09-19 05:01 GMT   |   Update On 2019-09-19 05:01 GMT
போடியில் திருமணமான 2 மாதத்தில் மர்மமான முறையில் இறந்த இளம்பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:

போடி நகராட்சி பேட்டையை சேர்ந்தவர் வசந்தா(வயது29). இவருக்கும் தேனி அல்லிநகரத்தை சேர்ந்த ஆனந்தன் என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

வசந்தா சரியாக சாப்பிடாததால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அடிக்கடி வாந்தி எடுத்துள்ளார். இதனைதொடர்ந்து போடியில் உள்ள தனது வீட்டில் தங்கி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

சம்பவத்தன்று காலை தண்ணீர் குடித்தவர் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். போடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை சோதித்த டாக்டர்கள் வசந்தா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வசந்தாவின் சகோதரர் குமார் கொடுத்த புகாரின்பேரில் போடி நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருமணமாகி இரண்டே மாதங்கள் ஆவதால் உத்தமபாளையம் சப்-கலெக்டர் வைத்திநாதன் மற்றும் டி.எஸ்.பி ஈஸ்வரன் ஆகியோர் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News