செய்திகள்
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் விஷம் குடித்து தற்கொலை
கோவையில் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் இந்து முன்னணி பிரமுகர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:
கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் சுரேஷ் (வயது 37). திருமணமாகவில்லை. இவர் இடையர்வீதியில் தங்க நகை பட்டறை வைத்து நடத்தி வந்தார்.
மேலும் உக்கடம் பகுதி இந்து முன்னணி நகர பொறுப்பாளராகவும் இருந்து வந்தார். சுரேஷ் தொழிலில் போதிய வருமானம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார். இதன் காரணமாக அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். கடந்த 14-ந் தேதி பட்டறையில் இருந்த சுரேஷ் விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சுரேசை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் கிசிச்சை பலனளிக்காமல் சுரேஷ் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் சுரேஷ் (வயது 37). திருமணமாகவில்லை. இவர் இடையர்வீதியில் தங்க நகை பட்டறை வைத்து நடத்தி வந்தார்.
மேலும் உக்கடம் பகுதி இந்து முன்னணி நகர பொறுப்பாளராகவும் இருந்து வந்தார். சுரேஷ் தொழிலில் போதிய வருமானம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார். இதன் காரணமாக அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். கடந்த 14-ந் தேதி பட்டறையில் இருந்த சுரேஷ் விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சுரேசை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் கிசிச்சை பலனளிக்காமல் சுரேஷ் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.