செய்திகள்
கோப்பு படம்

ஆனைமலை அருகே இளம்பெண்ணை மானபங்கம் செய்த வாலிபர் கைது

Published On 2019-09-18 10:00 GMT   |   Update On 2019-09-18 10:00 GMT
ஆனைமலை அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மானபங்கம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள நரசிம்மா நகரை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 24). கூலித் தொழிலாளி.

நேற்று வீட்டில் இருந்த இவர் வீட்டு வேலைகளை செய்து கொண்டு இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரது மகன் மணிகண்டன் என்கிற கனகசுப்பிரமணியம் (26) என்பவர் அத்துமீறி விஜயலட்சுமியின் வீட்டுக்குள் நுழைந்தார். பின்னர் வீட்டில் தனியாக இருந்த விஜயலட்சுமியை மானபங்கம் செய்ய முயன்றார். இதில் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார்.

இதனால் பயந்த மணிகண்டன் விஜயலட்சுமியை தாக்கி நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.இது குறித்து விஜயலட்சுமி ஆனைமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற மணிகண்டனை தேடி வந்தனர். இரவு தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

மணிகண்டன் மீது பெண்வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News