செய்திகள்
கோப்பு படம்

நுங்கம்பாக்கத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 46 பேரிடம் ரூ.26 லட்சம் மோசடி

Published On 2019-09-18 08:49 GMT   |   Update On 2019-09-18 08:49 GMT
நுங்கம்பாக்கத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 46 பேரிடம் ரூ.26 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக பெண் ஊழியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:

சென்னை நுங்கம்பாக்கத்தில் செயல்பட்டு வந்த நிறுவனம் ஒன்று வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக விளம்பரம் செய்து இருந்தது.

இதை நம்பி பலர் அந்த நிறுவனத்தில் பணம் கட்டினர். இதுபோன்று 46 பேர் பணம் கட்டி ஏமாந்து உள்ளனர்.

ரூ. 26 லட்சம் வரையில் மோசடி செய்த அந்நிறுவனம் வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி விட்டது.

இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தனியார் நிறுவனத்தின் ஊழியர் அருணாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நிறுவனத்தின் உரிமையாளர்களிடம் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News