செய்திகள்
தற்கொலை

எம்.ஜி.ஆர். நகரில் தொழிலாளி தற்கொலை- போலீசார் விசாரணை

Published On 2019-09-18 06:18 GMT   |   Update On 2019-09-18 06:18 GMT
சென்னை எம்.ஜி.ஆர். நகரில் சில நாட்களாக மனவேதனையில் இருந்த தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

சென்னை எம்.ஜி.ஆர். நகர் சூளைப்பள்ளம் நாகாத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அந்தோனி ராஜ் (வயது 35). கூலி தொழிலாளி. இவரது மனைவி பாத்திமா. இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர்.

அந்தோணி ராஜ் கடந்த 2015-ம் ஆண்டு மரம் ஏறியபோது தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதில் அவரது முதுகு தண்டு பாதிப்படைந்து படுக்கையாக வீட்டில் இருந்து வந்தார். பாத்திமா துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வந்தார்.

கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்த அந்தோணி ராஜ் திடீரென பிளேடால் தனது மர்ம உறுப்பை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்தோணி ராஜை பாத்திமா மீட்டு கே.கே. நகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அந்தோணி ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News