செய்திகள்
தற்கொலை

தளவாய்புரம் அருகே என்ஜினீயர் விவசாயம் செய்ததை அவமானமாக கருதிய மனைவி தற்கொலை

Published On 2019-09-17 16:58 GMT   |   Update On 2019-09-17 16:58 GMT
தளவாய்புரம் அருகே என்ஜினீயர் விவசாயம் பார்த்ததை அவமானமாக கருதிய அவரது மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
தளவாய்புரம்:

விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெரிய மாடசாமி. என்ஜினீயரான இவர் விவசாயம் செய்து வந்தார். இவரது மனைவி ஸ்டெல்லாமேரி (வயது25). இவரும் என்ஜினீயரிங் படித்துள்ளார். இருவருக்கும் 4 வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன் இருக்கிறான்.

என்ஜினீயரான கணவர் விவசாயம் பார்த்தது ஸ்டெல்லாமேரிக்கு பிடிக்கவில்லை. அதனை அவமானமாக கருதி, அரசாங்க வேலைக்கு செல்ல வற்புறுத்தியதால் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

இதே போல் சம்பவத்தன்று மாலையும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. குடும்பத்தினர் இருவரையும் சமாதானம் செய்தவுடன் பெரிய மாடசாமி வயல்காட்டிற்கு சென்று விட்டார். இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது ஸ்டெல்லாமேரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து சேத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குபதிவு செய்தார். சாத்தூர் கோட்டாட்சியர் இது குறித்து விசாரணை நடத்துகிறார்.
Tags:    

Similar News