செய்திகள்
விபத்து

சூலூர் அருகே கார் மோதி கூலித்தொழிலாளி பலி

Published On 2019-09-17 11:26 GMT   |   Update On 2019-09-17 11:26 GMT
சூலூர் அருகே கார் மோதி கூலித்தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூலூர்:

சூலூர் அருகே உள்ள நீலாம்பூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது45) கூலி தொழிலாளி. இவர் கடந்த 10-ந் தேதி அவினாசி சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்த்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜெயராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News