செய்திகள்
நகை பறிப்பு

கோவை அருகே பெண்ணிடம் 4 பவுன் நகை பறித்த 2 பேர் கைது

Published On 2019-09-17 10:20 GMT   |   Update On 2019-09-17 10:20 GMT
கோவை அருகே பெண்ணிடம் 4 பவுன் நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை குரும்பபாளையத்தை சேர்ந்தவர் மகேந்திரன்(வயது55). சம்பவத்தன்று இவர் தனது மனைவி விஜயாவுடன்(42). மோட்டார் சைக்கிளில் கிணத்துக்கடவில நடைபெற்ற உறவினர் ஒருவரின் திருமணவிழாவிற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். ஒத்தக்கால் மண்டபம் பாலத்தின் அடியில் செல்லும் சாலையில் செல்வதற்காக வண்டியை திருப்பினார்.

அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் விஜயா கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்து கொண்டு தப்பி ஓடினர். இதுகுறித்து மகேந்திரன் செட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பெண்ணிடம் நகை பறித்தது போத்தனூரை சேர்ந்த ஷாஜகான் மற்றும் உக்கடத்தை சேர்ந்த சமீர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News