செய்திகள்
புதுவையில் கல்லூரி சென்ற மாணவி மாயம்
புதுவையில் கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை சேர்ந்தவர் கண்ணையன். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களது மகள் தனுஜா (வயது19). இவர் கோரிமேட்டில் உள்ள மதர்தெரசா பல் மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று காலை தனுஜா கல்லூரிக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறி மோட்டார் சைக்கிளில் சென்றார். ஆனால் அதன்பிறகு தனுஜா வீடு திரும்பவில்லை. தோழிகள் மற்றும் உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் எங்கும் தனுஜா இல்லை.
இதையடுத்து கண்ணையன் தனது மகள் மாயமானது குறித்து உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடிவருகிறார்கள்.