கீழக்கரையில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா
கீழக்கரை:
கீழக்கரை அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. கீழக்கரை நகர் அ.தி.மு.க. செயலாளர் ஜகுபர் உசேன் தலைமையில் ஊர்வலமாக சென்று இந்து பஜார், வி.ஏ.ஓ. சாவடி புதிய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இதில் திருப்புல்லாணி ஒன்றிய அ.தி.மு.க. துணை செயலாளர் பாக்கியநாதன், கீழக்கரை நகர் அ.தி.மு.க. துணை செயலாளர் குமரன், பொருளாளர் அரி.நாராயணன், மீனவர் அணி நகர் செயலாளர் நண்டு முனியசாமி, இளைஞர் பாசறை நகர் தலைவர் செல்வகணேச பிரபு, வார்டு செயலாளர்கள் அசோகன், ராயப்பன், எம்.ஜி.ஆர். பாரூக் உட்பட திரளான அ.தி.மு.க. நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கீழக்கரை அருகே புல்லந்தையில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சரஸ்வதி பாக்கியநாதன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அண்ணா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.