செய்திகள்
அரிவாள் வெட்டு

நெல்லை பேட்டையில் பெயிண்டருக்கு அரிவாள் வெட்டு- டிரைவருக்கு வலைவீச்சு

Published On 2019-09-16 14:40 GMT   |   Update On 2019-09-16 14:40 GMT
நெல்லை பேட்டையில் பைக்கில் அதிவேகமாக சென்ற தகராறில் பெயிண்டரை அரிவாளால் வெட்டிய டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
நெல்லை:

நெல்லை பேட்டை சாஸ்திரி நகரை சேர்ந்தவர் முத்துசாமி மகன் கணேசன்(வயது 32), பெயிண்டர். அதே பகுதியை சேர்ந்தவர் காதர்பாட்ஷா(28).  இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். காதர் பாட்ஷா கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் பைக்கில் அதிவேகமாக சென்று வந்துள்ளார். 

இதனை கணேசன் கண்டித்துள்ளார். சம்பவத்தன்றும் காதர் பாட்ஷா தனது பைக்கில் வேகமாக சென்று வந்துள்ளார். கணேசன் அதனை கண்டித்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே காதர் பாட்ஷா தான் வைத்திருந்த அரிவாளால் கணேசனை சராமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் கணேசனுக்கு 5 இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது.  

இதில் படுகாயம் அடைந்த கணேசனை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய காதர் பாட்ஷாவை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News