செய்திகள்
பள்ளி கல்வித்துறை

10-ம் வகுப்பு பொதுத்தேர்வின் புதிய தேர்வு அட்டவணை வெளியீடு

Published On 2019-09-16 14:01 GMT   |   Update On 2019-09-16 14:01 GMT
10-ம் வகுப்பு பொதுத்தேர்வின் புதிய தேர்வு அட்டவணையை பள்ளி கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது.
சென்னை:

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 17-ந் தேதி முதல் ஏப்ரல் 9-ந் தேதி வரை  நடத்துவதாக அறிவித்திருந்த நிலையில், தமிழ் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழித்தாள் தேர்வுகள் ஒரே தாளாக மாற்றப்பட்டதால் தேர்வு அட்டவணையில் திருத்தம் செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில், தற்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வின் புதிய தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 10-ம் வகுப்பு  பொதுத்தேர்வானது மார்ச் 27-ந் தேதி முதல் ஏப்ரல் 13-ந் தேதி வரை நடைபெறும். 

பொதுத்தேர்வு முடிவுகள் மே 4-ம் தேதி வெளியிடப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. 
Tags:    

Similar News