செய்திகள்
கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

Published On 2019-09-16 11:14 GMT   |   Update On 2019-09-16 11:14 GMT
போச்சம்பள்ளி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

போச்சம்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்துள்ள நாகர்குட்டை பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

சம்பவத்தன்று நாகர்குட்டை மலைக்கு நடந்து சென்ற போது அதே பகுதியை சேர்ந்த மாதையன் மகன் வெற்றிவேல் (வயது28) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட அந்த சிறுமி கடந்த 13-ந்தேதி அன்று வீட்டில் வி‌ஷத்தை குடித்து மயங்கி விழுந்து கிடந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு வந்து பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் வாங்கினர்.

அதன் அடிப்படையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வெற்றிவேல் என்பவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

Similar News