செய்திகள்
தற்கொலை

ராஜபாளையத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய நர்சு- தந்தை புகார்

Published On 2019-09-16 09:49 GMT   |   Update On 2019-09-16 09:49 GMT
ராஜபாளையத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய நர்சு சாவில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை போலீசில் புகார் கூறியுள்ளார்.

ராஜபாளையம்:

ராஜபாளையம் சுந்தர் ராஜபுரத்தை சேர்ந்தவர் காசிராஜன். என்ஜினீயரான இவர் தற்போது விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி ஸ்டெல்லாமேரி (வயது28). நர்சாக பணியற்றிய இவர், தற்போது வேலை பார்க்காமல் வீட்டில் இருந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் ஸ்டெல்லா மேரி தூக்கில் பிணமாக தொங்குவதை உறவினர்கள் பார்த்தனர். இது குறித்து அவரது தந்தை சாமி தாசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

மகள் தற்கொலை செய்து கொண்டதாக வந்த தகவலால் சாமிதாஸ் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் மகள் வீட்டிற்கு வந்தார். அதற்குள் ஸ்டொல்லாமேரி உடல் கிழே இறக்கி வைக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக சேத்தூர் புறக்காவல் நிலையத்தில் சாமிதாஸ் புகார் கொடுத்தார். அதில் ஸ்டெல்லாமேரி சாவில் மர்மம் இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார்.

சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News