செய்திகள்
மழை

தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை- பொதுமக்கள் மகிழ்ச்சி

Published On 2019-09-15 16:44 GMT   |   Update On 2019-09-15 16:44 GMT
தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் முழுவதும், கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில், பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டியில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று காலை 8 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக அரூரில் 112 மில்லி மீட்டரும், பாப்பிரெட்டிப்பட்டியில் 30 மில்லி மீட்டரும், தர்மபுரியில் 3 மில்லி மீட்டரும், பென்னாகரத்தில் 2 மில்லி மீட்டரும் என்று மொத்தம் 147 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதன் மாவட்ட சராசரி 21 மில்லி மீட்டர் ஆகும்.

இதனால் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Tags:    

Similar News