செய்திகள்
கமல்ஹாசன்

பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து கமல்ஹாசன் ஆறுதல்

Published On 2019-09-15 16:17 GMT   |   Update On 2019-09-15 16:17 GMT
பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்தினரை சந்தித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆறுதல் தெரிவித்தார்.
சென்னை:

சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ  (23), கனடா செல்வதற்காக தேர்வு எழுதி முடித்து விட்டு பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையில் இருந்து பல்லாவரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் நடுவில் வைத்திருந்த பேனர் சரிந்து அவர் மீது விழுந்தது. அதனால், நிலைதடுமாறி கீழே விழுந்த அவர், பின்னால் வந்த தண்ணீர் லாரியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்நிலையில், உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்தினரை சந்தித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆறுதல் தெரிவித்தார். பேனர் கலாசாரத்தை ஒழிக்க வேண்டும், அப்படி ஒழிக்கவில்லை என்றால் மக்களே அதனை ஒழிப்பார்கள். பேனர் விபத்து வழக்கில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படவேண்டும் எனவும் கூறினார்.
Tags:    

Similar News