செய்திகள்
அண்ணா உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தும் இபிஎஸ்

அண்ணா உருவப் படத்துக்கு முதலமைச்சர், துணை முதல்வர் மலர்தூவி மரியாதை

Published On 2019-09-15 05:13 GMT   |   Update On 2019-09-15 05:13 GMT
அண்ணாவின் 111-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப் படத்துக்கு தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னை:

பேரறிஞர் அண்ணாதுரையின் 111-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா உருவப் படத்துக்கு தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.



இந்த விழாவில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி அண்ணா பிறந்தநாள் விழாவுக்கு கட்சிக்கொடிகள், பேனர்கள் தவிர்க்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News